Friday, April 29, 2011

'ஐநா செயலர் விசாரணைக்குழு அமைக்க முடியும்'


ருத்ரகுமாரன்
ருத்ரகுமாரன்
ஐநா செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஐநா செயலருக்கு அதிகாரம் இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் அமைப்பின் பிரதமரான உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும் கூறிய அவர், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விடயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்புச் சபையின் அனுமதி தேவை என்று கூறியுள்ள ருத்திரகுமாரன்,ஆனால் அங்கு அது குறித்து புலனாய்வு செய்வதற்கு சட்டவாதிகளுக்கு பரிந்துரைப்பதை ஐநா செயலர் தானே செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்காக நாடு கடந்த அரசாங்கம் ஒரு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐநா செயலாளரின் ஆலோசனைக்குழுவின் அறிக்கையானது, இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடந்திருக்கீறது என்பதை பல வகைகளிலும் உணர்த்துவதாகக் கூறிய அவர், அது குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட்டாலே மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வாழங்கியதன் மூலம் தமிழ் மக்களுக்கு பாதகத்தை விளைவித்தார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த விமர்சனங்கள் பற்றிக் கேட்டதற்குப் பதிலளித்த ருத்திரகுமாரன், புலம்பெயர் தமிழர் இந்த போராட்டத்தை நடத்தவில்லை என்றும், இலங்கையில் இருந்த தமிழர்களே அதனை நடத்தியதாகவும் கூறினார், ஆனாலும் இந்தப் போர் குறித்து முழுமையான ஒரு விசாரணை நடத்தப்பட்டாலே முழுமையான உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110428_ruthraonreport.shtml

 
 

No comments:

Post a Comment